பிரித்தானியாவில் 2026 மே,ஜூன் மாதங்களில் பதிவான சாதனை வெப்ப அலை காரணமாக,இதுவரை ஆயிர கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் 2700+ உயிரிழப்புக்கள் ஏற்றப்பட்டதாகவும் இங்கிலாந்தின் வரலாற்றில் அதிக வெப்பம் ஜூன் மாதத்தில் பதிவானதாகவும் கூறப்படுகின்றது. அந்த குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பே 42% இறப்புக்களுக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.
தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆறுகள் சுருங்கி,பசுமை நிலங்கள் காய்ந்து போயுள்ளன. விவசாயம்,நீர் வழங்கல் பாதிப்படைந்துள்ளன.பொருளாதார இழப்பு பில்லியன் பவுண்டுகளை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அடுத்த கட்ட வெப்ப அலைக்கு உரிய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த வெப்ப அலை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மெட் அலுவலகம் மற்றும் சுகாதார நிபுணர்கள், காலநிலை மாற்றம் இல்லையெனில் இத்தகைய தீவிர வெப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என எச்சரித்துள்ளனர். காட்டுத்தீ, வறட்சி அறிவிப்புகள், ஹோஸ் பைப் தடைகள் ஆகியவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளன.
விவசாயிகள் பயிர் இழப்புகளால் தவித்து வருகின்றனர். நதிகளில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, மீன் இனங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசு நீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும் என்பதால், நீண்டகால திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
