ஐரோப்பாவில் முதல் நாடாக பிரான்சில் தடை! முக்கிய காரணங்கள்!

Published:

பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு சமூக வலைதளங்களை தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக இந்த சட்டம் வரும் செப்ரெம்பர் முதல் அமுலுக்கு வருகின்றது.இனி தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் இப்போதுள்ள கணக்குகளும் மூடப்படும் எனவும் வயது சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.அத்துடன் உயர் பாடசாலைகளில் தொலைபேசி தடை உள்ளிட்டவை அடங்கும்.

இது குறித்து வரவேற்று தனது மகிழ்ச்சியை தெரிவித்த மக்ரோன்,இந்த தடைகள் குழந்தைகளின் மனநலன், பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவித்தார். அதோடு வழமை போல எதிர்கட்சிகள்,இடதுசாரிகள் இதனை கண்டித்துள்ளதுடன் அரசியல் சாசனத்திற்கு முரணானது என விமர்சித்துள்ளனர்.

இந்த சட்டம் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு, சைபர் புல்லிங் மற்றும் அடிமைத்தனம் போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு ஏற்கெனவே பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய சட்டம் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட தளங்களுக்கு வயது சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை கட்டாயப்படுத்துகிறது.

உலக அளவில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வரும் சூழலில், பிரான்ஸ் ஐரோப்பாவில் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்கும் அதேவேளையில், சில தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்துவதில் சிரமம் இருப்பதாகக் கூறுகின்றன. இந்த சட்டம் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

spot_img

Recent articles

spot_img