மீண்டும் மீண்டும் செம்மணியில் புதைக்கப்படும் உண்மைகள்!

Must Read

இன்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரைச் சந்தித்தனர். அதன்போது அவர்களிடம் மகஜரையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்த சங்கத்தினர் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்தனர். அப்போது, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் தங்களுக்குத் திருப்தி இல்லை என்றும்…..அவர்களால் பேசமுடியுமே தவிர சரியான தீர்வைத் தரும் அதிகாரமோ, வல்லமையோ அவர்களிடம் இல்லையெனக் கூறியதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இது சர்வதேச அவதானம், மேற்பார்வை, தலையீடு, விசாரணை என கோரப்படுவதன் மீது ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் வைத்திருந்த நம்பிக்கைகள் மேல் விழுந்த பேரிடி! ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கூறியவை சரிதான். அவர்களுக்குரிய அதிகார வரம்புகள் விசாலமானவையல்ல. அதனைத் தாண்டி வெற்றி, தோல்வி என்பன எப்போதும் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்குள் மட்டுமே….நடுவர்களுக்கோ, மேற்பார்வையாளர்களுக்கோ அந்த முடிவுகள் எந்தத் தாக்கத்தையும் கொடுக்கப் போவதில்லை.

நோர்வே அதில் பிரதான உதாரணமாகக் காலங்கடந்து நிற்கின்றது! இந்தப் பிரச்சினைகள் இத்தோடு முடியப்போவதில்லை. சரியோ, பிழையோ, விதிமுறைகள் நீதியானவையோ, அநீதியானவையோ, இருதரப்புக்கள் மட்டுமே கடைசிவரை ஆடிமுடிக்க வேண்டும். நடுவர்களையோ, ஏனையோரையோ தமக்காக ஆடும்படி கேட்கவும் முடியாது. அவர்கள் ஆடவும் மாட்டார்கள்.

இந்த உண்மையைத்தான் இன்றைய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணியில் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர். அதைப் போராட்டம் செய்த உறவுகள் சங்கத்தினரின் வார்த்தைகள் ஊடாகவே மக்களுக்கு வெளிப்படுத்தச் செய்திருப்பது மிகச்சிறந்த திட்டமிடல். இதனை மக்கள் விளங்கித் தமக்குள் உள்வாங்கித் தமக்குத் தேவையான தீர்வைத் தாமே பெற்றுக் கொள்ள முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

More Articles Like This