பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

Must Read

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது. 
16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர் , சிறுமி 06மாத கர்ப்பமாக இருக்கும் போது , சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். 

சம்பவம் குறித்த வரக்கு விசாரணைகள் எதிரி இன்றி,யாழ் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில்,விசாரணையின் அடிப்படையில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது.

தற்போது குற்றவாளி பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து , குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களுக்கும் குற்றவாளி தொடர்பான தகவல்கள் அறிவிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

ஓடிஸியிலிருந்து நம்மை அறிதல்

நேற்று கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹோமரின் ஓடிஸியை நானும் ஜீவியும் திரையரங்கில் சென்று பார்த்தோம். அதி அற்புதமான திரை அனுபவத்தையும் அதற்கீடான ஆழமான சிந்தனை அருட்டல்களையும்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac...

ஊருக்கு போன இடத்துல பிறந்த நாள் கொண்டாட்டம்! இப்படியும் நடக்குது!

ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது...

பிரான்சில் கடும் எச்சரிக்கை! தமிழர்கள் அவதானம்! சுட்டெரிக்கப்போகும் வெயில்

பிரான்ஸ் மக்கள் மே மாத இறுதி முதல் இதுவரை மூன்று கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளனர். இப்போது நான்காவது வெப்ப அலை வரவுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள்...

பிரான்ஸ்: லாகூர்நெவ் பகுதியில் சுகாதார சீர்கேடு! 17 கடைகளுக்கு பூட்டு!

பாரிஸ் அருகே உள்ள சென்-சென்ட்-டெனிஸ் மாவட்டத்தின் லா கோர்னவ் (La Courneuve) நகரில் உள்ள ‘Quatre-Routes’ பகுதியில், Paul-Vaillant-Couturier வர்த்தகத் தெருவில் கடந்த ஜூலை மாதத்...

மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட உண்மைகள். செம்மணியிலும் தொடருமா?

அரசு காலம் கடத்தலாம். அரசியல் மறைக்கலாம். அதிகாரம் மௌனமாக இருக்கலாம். ஆவணங்கள் அழிக்கப்படலாம். சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம். ஆனால் மண், தனது அடியில் புதைக்கப்பட்ட உண்மையை ஒருநாள்...

More Articles Like This