பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)
- பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள்
- பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்
- பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி
- பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை


